திங்கள், ஜூலை 08, 2013

சக்தியின் வடிவம்


இந்து தர்மத்தில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது. பிற தர்மங்களில் உருவ வழிபாடு இல்லை என்றும் உருவ வழிபாட்டு முறையே முட்டாள்தனமானது என்றும் கூறுவது சரியல்ல. இதை விளங்கிக்கொள்வதற்கு உருவ வழிபாட்டின் அவசியத்தை நாம் அறிய வேண்டும்.

நிறைந்த ஞானம் கொண்ட தவ யோகிகள் கடவுளை மனதாலேயே தியானிக்க முடியும். ஆனால் ஒரு பாமரன் கடவுளை வழிபட வேண்டுமென்றால் அவனது அறிவிற்கேற்ப கடவுளை அவனுக்கு உணர்த்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் உருவ வழிபாட்டு முறை. பாமரனின் சிற்றறிவிற்குப் புலப்படும் வகையில் இறைவனை சிலையாக வடித்து வைத்தால், இறைவனை வணங்க அவனுக்கு சுலபமாக இருக்கும்.

உருவ வழிபாடு என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. இஸ்லாமியர்கள் மெக்கா உள்ள திசையை நோக்கித் தொழுவதும், கிறிஸ்த்தவர்களின் சிலுவையும் ஒரு வகையில் உருவ வழிபாட்டு முறைகளே.
இந்து தர்மத்தில் சிவனைத் தவிர அனைத்து கடவுள்களும் சிலை வடிவில்தான் வணங்கப்படுகின்றனர் . சிவபெருமான் மட்டுமே லிங்க வடிவில் வணங்கப்படுகிறார். இதைப் பற்றி பல கதைகள் கூறப்படுகிறது. லிங்கம் என்பது சக்தியின் வடிவம். சமஸ்க்ருத மொழியில் 'லிங்கம்' என்றால் 'உருவம்' என்று பொருள்.


சிவலிங்கம் இந்த அண்டத்தில் நிறைந்திருக்கும் சக்தியின் வடிவம். இந்த அண்டத்தில் உள்ள மாபெரும் சக்திகள் அணைத்தும் லிங்க வடிவிலேயே உள்ளன. இதற்கு சிறந்த உதாரணங்கள்: அணு உலை, அணுகுண்டு.

அணுகுண்டு
அணு உலை

இந்து தர்மத்தில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கைகள் அனைத்தும் (சில அறிவிலிகளால் இடையில் பரப்பப்பட்ட பல முட்டாள்தனங்களைத் தவிர) அறிவியல் பூர்வமானவை. அவை, அன்றைய பாரதத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சியை பறைசாற்றும். அவற்றை அறிந்து பாதுகாப்பது நம் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக